மொபைலின் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்!

1

நாம வாங்குற மொபைல்ல மிகமிக முக்கியமான பிரச்சனையே அதோட ‘பேட்டரிதிறன்’ தான்.  எப்படி நம்ம மொபைலை யூஸ் பண்ணுறமோ அதை வெச்சி தான் நம்ம மொபைலின் பேட்டரியோட ஆயுள்காலம் இருக்கு. சரி இங்க மொபைலில் பேட்டரியை எப்படி பயன்படுத்தினால் அது ரொம்ப நாளைக்கு உழைக்கும்கிறதை பார்க்கலாம்.

+ நீங்க கடையிலே போயி புதுசா ஒரு மொபைல் வாங்கப்போறீங்கன்னா முதல்ல நீங்க எந்த மாடல் மொபைலை எடுத்தாலும் அதோட பேட்டரி திறன் எவ்ளோன்னு கண்டிப்பா பாருங்க 2” அங்குல திரை உள்ள எல்லா மல்டிமீடியா வசதிகளும் இருக்குற ஒரு மொபைலுக்கு குறைஞ்சது 1000 mAh திறன் கொண்ட பேட்டரி இருக்கான்னு செக் பண்ணிக்கிறது ரொம்ப முக்கியம். 

இந்த ‘அளவுகுறியீடு’ பேட்டரியோட பின்பக்கத்துல கண்டிப்பா போட்டுருப்பாங்க. அதுல பாத்து நீங்க தெரிஞ்சிக்கலாம். ஏன்னா குறைஞ்சது இந்த அளவுல பேட்டரிதிறன் இருந்தா தான் நீங்க பாட்டு கேக்குறது, இன்டர்நெட்ல பண்ணுறது,வீடியோ பாக்குறது,கேம்ஸ் விளையாடுறது.வை-பை மூலமா இன்டர்நெட் கனக்ட் பண்ணி பாக்குறதுன்னு மொபைல்ல இருக்குற எல்லா வசதிகளையும் ரொம்ப நேரம் பயன்படுத்த முடியும்.

+ இப்படி புதுசா வாங்குற மொபைலை வாங்குன உடனே சிம்மை போட்டு பயன்படுத்த கூடாது.மொதல்ல மொபைலை ஆப் பண்ணிட்டு 8 மணி நேரம் சார்ஜ் ஏத்தனும். ஒரு ரெண்டுமணி நேரம் ஆன உடனே உங்க மொபைல்ல ‘பேட்டரி புல்’லுன்னு காட்டும்.அப்படி காட்டினாலும் நீங்க நிப்பாட்டிடாதீங்க புதுபோனுக்கு முதல் தடவை சார்ஜ் ஏத்துறப்போ கண்டிப்பா 8 மணி நேரம் ஏத்தனும்.

+ அடுத்தடுத்த முறை நீங்க சார்ஜ் ஏத்தும் போது ‘பேட்டரி புல்’லுன்னு காட்டினா உடனே சார்ஜ் ஏத்துறதை நிப்பாட்டிடனும்.இல்லேன்னா பேட்டரி ரொம்ப நாளைக்கு உழைக்காது.

+ உங்க மொபைல்ல எந்த நேரமும் ப்ளுடூத்தை ஆன் பண்ணி வைக்காதீங்க,இதனால உங்க பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போயிடும்.

+ அதேமாதிரி ‘வை-பை’யையும் எந்த நேரமும் ஆன் பண்ணி வைக்க கூடாது.

+ உங்க மொபைலோட திரைவெளிச்சத்தோட(screen brighness) அளவை மொபைல்ல முன்னிருப்பா (default) என்ன அளவுல இருக்கோ அந்த அளவுலேயே வெச்சிருங்க. வெளிச்சத்தை அதிகப்படுத்தினாலும் சீக்கிரம் பேட்டரி தீர்ந்து போயிடும்.

+ மொபைல்ல பேட்டரியோட அளவு முழுசா தீர்ந்த பொறவு தான் நீங்க சார்ஜ் ஏத்தனும். பாதி,இல்லேன்னா கால்வாசி அளவுல இருக்கும் போது சார்ஜ் ஏத்தக் கூடாது.இதனாலேயும் பேட்டரி ரொம்ப நாளைக்கு உழைக்காம போயிடும்.

+ மொபைலோட திரையில் வீடியோ ரிங்டோன்,லைவ் வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர், அதிக பிக்சல் உள்ள புகைப்படங்கள் இவற்றை எல்லாம் பயன்படுத்தக் கூடாது அப்படி பண்ணினாலும் சார்ஜ் சீக்கிரமே தீர்ந்து போயிடும்.

+ நாம ஒவ்வொருத்தரும் புதுசுபுதுசா ரிங்டோன் வெச்சிக்க ஆசைப்பட்டு விதவிதமா MP3 பாடல்களை ரிங்டோனா வெச்சிருப்போம்.இதனாலேயும் சார்ஜ் சீக்கிரம் போயிடும்.அப்படி வெச்சாலும் கூட அரை அல்லது ஒருநிமிஷத்துக்கு கட் பண்ணின பாடல்களை மட்டும் ரிங்டோனா வெச்சிக்கங்க, ஒருமுழு பாடலை ரிங்டோனா வைக்க வேணாம்.

+ எப்ப பாத்தாலும் மொபைலை ‘சைலன்ட்’ல வெக்காதீங்க,அதேமாதிரி ரிங்டோன் ஒலியோட அளவையும் குறைச்சி வையுங்க.

+ நம்மல்ல நெறைய பேர் நைட்டு தூங்கப்போறப்போ மொபைலை சார்ஜ்ல போட்டுட்டு மறுநாள் தூங்கி எந்திருக்கும் போதுதான் அதை பிளக்ல இருந்து எடுப்போம் இது ரொம்ப ரொம்ப தப்பு இப்படி பண்ணினா வெகு சீக்கிரத்துல பேட்டரி சூடாகி உப்பி போயி வேலை செய்யாம போயிடும்.

+ இன்டர்நெட் யூஸ் பண்ணுற நேரம்,மெயில் செக் பண்ணுற நேரம் போக மத்த நேரங்கள்ல மொபைல்ல இன்டர்நெட் உபயோகத்தை நிப்பாட்டி வையுங்க.இதன் மூலமாவும் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போகும்.

+ அதிக வெப்பமுள்ள இடங்கள்ல பேட்டரியை வைக்க வேணாம்,அடிக்கடி மொபைல்ல பேட்டரியை கழட்டி கழட்டி மாட்டக்கூடாது.

+ கூடுமானவரைக்கும் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் விக்குற ஒரிஜினல் பேட்டரிகளை மட்டுமே மொபைல்ல யூஸ் பண்ணுங்க.காசுக்கு ஆசைப்பட்டு எந்த காரணத்தை கொண்டும் போலி யான அதேமாதிரி சார்ஜரும் ஒரிஜினலை தான் யூஸ் பண்ணனும்.

இப்படிப்பட்ட சின்னசின்ன விஷயங்கள்ல கவனமா இருந்தாலே போதும்.உங்க மொபைலோட பேட்டரி நீண்ட நாட்களுக்கு நல்லா உழைக்கும்.

1 comments:

‘3G’ மொபைல் வாங்கப் போறீங்களா? – ஒரு நிமிஷம்!

1
ந்தியாவைப் பொருத்தவரைக்கும் இப்போ மொபைல் உலகில் பாப்புலராகி வர்ற ஒரு விஷயம் 3G சேவை தான். அதனாலோ என்னவோ நோக்கியா
சாம்சங் உட்பட பல வெளிநாட்டு நிறுவனங்களும் ஸ்பைஸ்,மைக்ரோமேக்ஸ் போன்ற இந்திய மொபைல்தயாரிப்பு நிறுவனங்களும் மிகக் குறைந்த விலையில 3G மொபைல்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஆனா இதுல நாம கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கு.அது என்னன்னா? ‘3G’ங்குற பேர்ல விற்கப்படுற எல்லா மொபைல்களும் ஒரு முழுமையான 3G தொழில்நுட்ப வசதிகளை கொண்ட மொபைல்களாக இருப்பதில்லை.

குறிப்பாக விலை குறைவாக விற்கப்படுற 3G மொபைல்கள்ல சில வசதிகள் இல்லாமல் இருக்கும்.அதனால நாம 3G மொபைல்களை வாங்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.முதல்ல நம்மல்ல நெறைய பேர்கள் பின்பக்கத்துல மட்டுமில்லாம வீடியோ காலிங் பேச உதவுற மொபைலோட முன்பக்கத்துலேயும் கேமரா (FROND CAMERA) இருக்குற மொபைல் தான் 3G மொபைல்னு நெனைக்கிறாங்க. அது வாஸ்தவம் தான்.

ஆனா அது மட்டுமே 3G இல்லை. 3G சேவைங்கிறது ஒரு மூன்றாம் தலை முறை தொழில் நுட்பத்தோட பேரு ( 3G is the third generation of mobile communications systems ) அவ்ளோ தான்.

இந்த 3G தொழில்நுட்பத்துல மூன்று வகையான இணைய வங்கம் உண்டு.அந்தந்த இணைய வேகத்தோட அளவுகளைப் பொறுத்து ஒவ்வொரு இணைய வேகத்துக்கும் ஒவ்வொரு பேர் உண்டு.

+ WCDMA( Wideband Code Division Multiple Access) – இதோட அதிகப்பட்ச இணைய வேகம் 2 Mbps வரைக்கும் தான். ஆனாலும் நோக்கியா உட்பட பெரும்பாலான மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தில் அதிகபட்ச வேகம் 384 kbps என்ற வேக அளவில் தான் கொடுக்கிறார்கள்.

+ HSDPA(High-Speed Downlink Packet Access ) – இதோட அதிகபட்ச இணைய வேகம் 14.4 Mbps. இந்த HSDPA வுல பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகள் இருக்கு.ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வேகம்.

கீழே உள்ள படத்தை பாருங்க உங்களுக்கு புரியும்.இதுல நமக்கு மொபைல் தயரிச்சி விற்பனை செய்ற நிறுவனங்கள்  மொபைலோட விலைக்கு ஏத்த மாதிரி ஒரு பிரிவின் வேகத்தை தேர்ந்தெடுத்து நம்ம மொபைல்ல குடுப்பாங்க.

nokia 5230 wcdma and hsdpa speed

nokia e6 hsdpa speed
நோக்கியா 5230 மாடல்ல WCDMA வில் இணைய இணைப்பின் வேகம் மற்றும் HSDPA வில் CATEGARY 6 ல் அதிகபட்ச வேகம் 3.6 Mbps  என்ற அளவில்
இருப்பதைப் பாருங்கள்.

அதேபோல நோக்கியா N8 மாடலில் HSDPA வில் இணைய இணைப்பின் வேகம் Cat9 இல் அதிகபட்ச வேகம் 10.2 Mbps அதன் இணையவேகத்தின் மாறுபட்ட அளவுகளைப் பாருங்கள்.

குறைவான விலையில் 3G மொபைல்களை தயாரித்து விற்பனை செய்யும் ஸ்பைஸ் லெமன்,பீடல்,மைக்ரோமேக்ஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் 3G மாடல்களில் WCDMA தொழிநுட்பத்தில் அதிகபட்சம் 384 kbps என்ற வேக அளவையும் HSDPA தொழில் நுட்பத்தில் அதிகபட்சம் 3.5 என்ற வேக இணை ப்பை தான் நமக்கு வழங்குகின்றன.மேலும் இந்திய நிறுவனங்கள் 3G என்ற பெயரில் விற்கும் மொபைல்களில் WCDMA தொழில்நுட்பத்தை மட்டுமே புகுத்தி குறைந்த விலையில் நம்மிடம் விற்கின்றனர்.

ஆகவே நீங்கள் ஒவ்வொரு முறை 3G மொபைல் வாங்கும் போதும். கண்டி ப்பாக அதன் நெட்வொர்க் மற்றும் இணைய இணைப்பின் வேகத்தின் அளவு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு வாங்கவும். அப்போது தான் மொபைலில் நாம் தடையில்லா இணைய இணை ப்பை பெற முடியும்.

அதேபோல என்னிடம் நெறைய பேர் இந்த மொபைல்ல முன்னாடி கேமரா இல்லை அத னால இது 3g மொபைல் இல்லை என்று சொல்வார்கள். வீடியோ காலிங் செய்யக்கூடிய வகையில் இருக்கும் முன்பக்க கேமரா 3G சேவையில் ஒரு மேம்படுத்தப்பட்ட வசதிதானே தவிர அது இருந்தால் மட்டுமே ஒரு மொபைல் 3G மொபைல் ஆகி விடாது. எத்தனையோ சீன நிறுவனங்கள் டபுள் கேமரா உள்ள மொபைல்களை சந்தையில் விற்கின்றன. உடனே அவை எல் லாம் 3G மொபைல் ஆகிவிடுமா என்ன?

இந்தியாவில் 3500/- ரூபாய் விலையிலிருந்து 3G மொபைல்கள் கிடைக் கின்றன.ஆகவே உங்கள் மொபைலை 3G க்கு அப்கிரேடு செய்யும் போது எல்லா வசதிகளும் உள்ள மொபைலாக இருக்கிறதா என்பதை கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.

1 comments:

மொபைலுக்கான இலவச எஸ்.எம்.எஸ் அப்ளிகேஷன்கள்!

1
நாம் மொபைல் போன் உபயோகிக்க ஆரம்பித்த காலம் தொட்டு போனில் பேசுவதை விட எஸ்.எம்.எஸ் அனுப்புவதைத் தான் பெரிதும் விரும்புகிறோம்.

'மௌனத்தை விட இந்த உலகில் மிகச்சிறந்த மொழி
வேறேதும் இல்லை' என்று சொல்வார்கள். இது எஸ்.எம்.எஸ் க்கு மிகவும் அழகாக பொருந்திப் போகிறது.காரணம் நாம் மொபைலில் பேசித் தீர்க்க முடியாத சில விஷயங்களை எஸ்.எம்.எஸ் மூலமாக பேசி தீர்த்து விடுவோம்.

எஸ்.எம்.எஸ் கூட நாம் மற்றவர்களிடம் மௌனமாய் பேசுவதைப் போல ஒரு மொழிதான். அப்படிப்பட்ட எஸ்.எம்.எஸ் சேவைக்கு மொபைல்சேவை தரும் நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ்,ஒரு நாளைக்கு நூறு எஸ்.எம்.எஸ் இலவசம்,ஒரு பைசாவுக்கு எஸ்.எம்.எஸ் என்று பல சலுகைகளை வழங்கி வருகிறார்கள்.

இதை சலுகைகள் என்று சொல்வதை விட மறைமுகக் கொள்ளை என்று தான் சொல்ல வேண்டும்.காரணம் மொபைல்சேவை தரும் நிறுவனங்கள் லாபம் இல்லாமல் எந்த சலுகைகளையும் நமக்கு தர மாட்டார்கள்.

அதனால் மொபைலும் உபயோகிக்க வேண்டும்.அதேநேரம் நமது மொபைலில் இருந்தே இலவசமாக மற்றவர்களுக்கு 'எஸ்.எம்.எஸ்'சும் அனுப்ப வேண்டும் இதற்கு சில நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ் சேவையுடன் கூடவே மொபைலுக்கான அப்ளிகேஷன்களையும் நமக்கு தருகின்றன.

அவைகளை இங்கே உங்களுக்காக தொகுத்து தருகிறேன்.

www.160by2.com  பெரும்பாலானவர்களால் உபயோகிக்கப்படும் முதல் இடத்தில் இருக்கும் இலவச எஸ்.எம்.எஸ் இணையதளம் இதுதான். இந்த இணையதளத்தில் இந்தியா மட்டுமல்லாது குவைத், சிங்கப்பூர்,மலேசியா,
யு.ஏ.இ என வெளிநாடுகளில் உள்ள மொபைல்களுக்கும் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.

இந்த இணையதளம் மொபைலுக்காகவே பிரத்யேகமாக தரும் அப்ளிகேஷனை நமது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டால் கணினி இல்லாமலேயே நமது மொபைலிலிருந்தே மற்றவர்களுக்கு இலவசமாக அனுப்பிக்
கொள்ளலாம்.இது ஜாவா வகையை சார்ந்த அப்ளிகேஷன் என்பதால் நோக்கியா,சாம்சங்,சோனிஎரிக்சன்,எல்.ஜி,மோட்டோரோலா என பெரும்பாலான கம்பெனிகளின் மொபைல்களுக்கு இந்த அப்ளிகேஷன் சப்போர்ட் செய்கிறது.பிளாக்பெர்ரி,ஐ-போன்,ஆன்ட்ராய்டு ஆகிய ஓ.எஸ் கொண்ட மொபைல்களுக்கும் அதன் மார்க்கெட்டுகளில் தனி அப்ளிகேஷனாக கிடைக்கிறது.

இந்த அப்ளிகேஷன் நமது மொபைலின் போன்புக்கில் உள்ள நம்பர்களை தானாகவே இணைத்துக் கொள்வதால் நாம் எஸ்.எம்.எஸ் அனுப்புவது இன்னும் எளிமையாகிறது.இதன் ஒரேகுறை 80 எழுத்துகளில் மட்டுமே எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.

+ www.way2sms.com  இந்த இணையதளமும் கணினி மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்களின் பேவரைட் இணையதளம்.கணினி மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்ப தினமும் 26 லட்சம் பேர்கள் இந்த தளத்தை பயன்படுத்துகிறார்கள்.160 எழுத்துகள் வரை நாம் எஸ்.எம்.எஸ் டைப் செய்து அனுப்ப முடியும்.

மொபைலுக்கான பிரத்யேகமான அப்ளிகேஷனை இவர்கள் இன்னும் தரவில்லை என்றாலும் நமது மொபைலின் பிரௌசரில் http://m.way2sms.com என்று டைப் செய்து இந்த இணையதளம் மூலம் நாம் மற்றவர்களுக்கு அளவற்ற இலவச எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.இங்கு வெளிநாடுகளுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி இல்லை.கூடுதல் சேவையாக நமது இ-மெயில் களை மொபைலில் படித்துக் கொள்ளும் வசதியையும் தருகிறார்கள்.

www.jaxtr.com  120 எழுத்துகளை மட்டுமே டைப் செய்து மற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ள முடியும்.மூன்று கட்டண திட்டங்கள் உண்டு அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்தால் குறைந்த கால்கட்டணங்களில் வெளிநாடுகளுக்கு பேசிக்கொள்ளவும்,இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளவும் முடியும்.இதில் இருக்கும் free connect மூலம் இலவசமாக பேசிக் கொள்ளலாம்.பிளாக்பெர்ரி,ஐ-போன்,ஆன்ட்ராய்டு ஆகிய ஒ.எஸ் மொபைல் களுக்கு பிரத்யேகமாக அப்ளிகேஷனும் உண்டு.

www.mysmsindia.com   way2sms இணையதளம் போல் உள்ளது. இந்தியாவுக்குள் எந்த மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.
தனியாக மொபைலில் பயன்படுத்த அப்ளிகேஷன் இல்லை.

www.mycantos.com  300 எழுத்துகள் வரை சப்போர்ட் செய்கிறது.மொபைலில் பயன்படுத்த தனி அப்ளிகேஷன் இல்லை.

www.sms440.com  மிக நீளமான எஸ்.எம்.எஸ் அனுப்ப உதவும் இணையதளம் இதுதான்.இணையதளத்தின் பெயரைப் போலவே கிட்டத்தட்ட 440 எழுத்து களை டைப் செய்து அனுப்பலாம்.மொபைலுக்கான தனி அப்ளிகேஷன் இல்லை.

www.ibibo.com   http://m.ibibo.com முகவரி மூலம் உங்கள் மொபைலில் இலவச எஸ்.எம்.எஸ் சேவையைபயன்படுத்தலாம்.மெயில்,போட்டோஸ்,மியூசிக்,
கேம்ஸ் என பல சேவைகள் இதில் உண்டு.

www.mobiyard.com   மொபைலுக்கான பிரத்யேகமான எஸ்.எம்.எஸ் அப்ளிகேஷன் இது. ஜாவா வகை என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போன்களை இது ஆதரிக்கிறது.இலவச எஸ்.எம்.எஸ் சேவையுடன் இன்ஸ்டன்ட் மெசஞ்ஜர்,கேமிங் போர்டல் என இதர சேவைகளும் உண்டு.அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.

www.skebby.com   இந்த அப்ளிகேஷனை மொபைலில் பயன்படுத்தும் அத்தனை பேர்களுக்கும் நீங்கள் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.பிளாக்பெர்ரி,ஐபோன்,ஆன்ட்ராய்டு,சிம்பியன்,ஜாவா,
விண்டோஸ் ஒ.எஸ் என எல்லா வகை ஒ.எஸ் மொபைல்களுக்கும் தனி அப்ளிகேஷனாக பயன்படுத்தலாம்.இலவசம் என்று சொன்னாலும் சேவையை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கிறார்கள்.அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.

1 comments:

கூகுள் + ஐ மொபைலில் பயன்படுத்துவது எப்படி?

0
மீபகாலமாக ஃபேஸ்புக்,டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இணைய தள ரசிகர்களிடையே தவிர்க்க முடியாத,பெரும் வரவேற்பை பெற்று வருது. எகிப்துல மக்கள் புரட்சி நடக்க மிக முக்கிய பங்காளனா இருந்தது இந்த ரெண்டு சமூக வலைத் தளங்களும் தான். இந்த வரவேற்பை ரொம்பவே கூர்ந்து கவனிச்சு கூகுள் நிறுவனம் அறிமுகப்
படுத்தியிருக்கும் ஒரு புதிய சோஷியல் நெட்வொர்க் தளம் தான் ‘கூகுள் பிளஸ்'.

இப்போ சோதனை ஓட்டமா இதை அறிமுகப்படுத்தியிருக்குது கூகுள்.காரணம் கூகுளோட ரசிகர்கள் இதுல ஏதேனும் குறைகளை சொன்னா அதை நிவர்த்தி பண்ணி அப்புறமா ஒரு முழுமையான தளமா குடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கு. கூடிய சீக்கிரம் இதுல இருக்குற சின்ன சின்ன குறைகளை எல்லாம் நிவர்த்தி பண்ணி ஃபேஸ்புக் ,டிவிட்டருக்கு நிகரா ‘கூகுள் பிளஸ்’ வரும்னு நாம நம்பலாம்.

ஜிமெயிலை அறிமுகப்படுத்தின புதுசுல எப்படி அதை ஏற்கனவே யூஸ் பண்ணுற ஒருத்தர் நம்மளை இன்வைட் பண்ணினா அதை பயன்படுத்த முடியும்கிற மாதிரி கூகுள் பண்ணிச்சோ அதே நிலமை தான் கூகுள் பிளஸ்க்கும்.ஆமாம்,நாம கூகுள் பிளஸ் தளத்தை முழுமையா பயன் படுத்தனும்னா அதை ஏற்கவே யூஸ் பண்ணுற நண்பர் யாராவது ஒருத்தர் நமக்கு இமெயில்ல இன்வைட் அனுப்பனும். அப்போதாம் நாம யூஸ் பண்ண முடியும்.

சரி டெஸ்க்டாப்,லேப்டாப்ல கூகுள் பிளஸ் ஈஸியா பயன்படுத்தலாம். மொபைல்ல அது சாத்தியமா?

கண்டிப்பா சாத்தியம் தான். ஆனா அதிலேயும் இன்னும் முழுமை இல்லை. இருந்தாலும் முடிஞ்சவரைக்கும் மொபைல்ல ‘கூகுள்பிளஸ்’ ஐ எப்படி பயன்படுத்தலாம்னு இங்க பாக்கலாம்.நீங்க ஆன்ட்ராய்டு ஓ.எஸ் உள்ள மொபைல்ல 2.1 இல்லேன்னா அதுக்கும் மேல உள்ள வெர்ஷன் வெச்சிருந்தீங்கன்னா முதல்ல உங்களோட ஆன்ட்ராய்டு மார்க்கெட்டை அப்டேட் பண்ணிட்டு அப்புறம் அங்க இருக்குற சர்ச் பாக்ஸ்ல google+ ன்னு டைப் பண்ணி தேடுனீங்கன்னா வர்ற அப்ளிகேஷன்கள்ல முதல் அப்ளிகேஷன் அதுவாத்தான் இருக்கும். அதை கிளிக் பண்ணி இன்ஸ்டால் பண்ணி நீங்க யூஸ் பண்ண ஆரம்பிக்கலாம்.

google + barcode
இல்லேன்னா உங்க மொபைல்ல இங்க இருக்குற பார்கோடை(மேலே உள்ள படத்தை பார்க்கவும்!) capture பண்ணுனீங்கன்னா வர்ற லிங்ல போயி அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்யலாம். பார்கோடை capture பண்ண உங்க மொபைல்ல barcode reader அல்லது barcode scanner அப்ளிகேஷன் கண்டிப்பா இருக்கணும். இல்லேன்னா மார்க்கெட்டுல போயி இலவசமா தரவிறக்கம் செஞ்சிக்கங்க.

ஆனா இப்போதைக்கு அமெரிக்காவுல இருக்குற ஆன்ட்ராய்டு மொபைல் களுக்கு மட்டும் தான் இந்த தனிப்பட்ட அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்யக்கூடிய வசதி இருக்குன்னு கூகுள் சொல்லியிருக்கு. மத்த நாட்டுல உள்ளவங்க அவங்க மொபைலோட ப்ரௌசர்ல m.google.com/plus ன்னு அட்ரஸ் டைப் பண்ணி கூகுள் பிளஸ் ஐ யூஸ் பண்ண முடியுமாம். அதெப்படி அவிங்க மட்டும் தனி அப்ளிகேஷனா பயன்படுத்தலாம். நம்மளால முடியாதான்னு நீங்க கேக்கலாம்.கண்டிப்பா முடியும்

எப்படி ? ரொம்ப சிம்பிள், உங்க கணிணியில ஆன்லைன்ல போயிட்டு இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க, அப்புறமா ஓபன் ஆகுற பக்கத்துல நடுவுல view ன்னு இருக்குறதை கிளிக் பண்ணுனா உங்க ஆன்ட்ராய்டு போனுக்கான ‘கூகுள் பிளஸ்’ அப்ளிகேஷன் டவுன்லோடு ஆகும்.அதை அப்படியே உங்க மொபைல இன்ஸ்டால் பண்ணி நீங்க பயன்படுத்தலாம்.

இப்போதைக்கு ஆன்ட்ராய்டு ஒ.எஸ் மொபைல்களுக்கும் ஆப்பிள் ஐ-போனுக்கு மட்டும் தான் இந்த தனி அப்ளிகேஷன் வந்திருக்கு. அடுத்ததா சிம்பியன் ஓ.எஸ்,பிளக்பெர்ரி ஓ.எஸ், விண்டோஸ் மொபைல் ஓ.எஸ் ல சீக்கிரம் வரப்போவுது. இந்த ஓ.எஸ் களுக்கான ‘கூகுள் பிளஸ்’ தனி அப்ளிகேஷனும், எஸ்.எம்.எஸ் மூலமா ‘கூகுள் பிளஸ்’ ஐ பயன்படுத்துற வசதியும் கொஞ்சம் லேட்டா வரும்.

ஆப்பிள் ஐ- போனுக்கு கூகுள் பிளஸ் அப்ளிகேஷன் இப்போது அதன் மார்க்கெட்டில் கிடைக்கிறது, தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்.

0 comments:

மொபைலுக்கான இணைய வானொலிகள்!

1

மொபைல் போன் வழியாக இணையதளங்களை பயன்படுத்தும் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.ஒரு வழியாக இந்தியாவிலும் 3ஜி எனப்படுகிற மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தை சென்னை உட்பட இந்தியாவின் பெருநகரங்களில் பி.எஸ்.என்.எல், ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ரிலையன்ஸ்,டோகோமோ என அனைத்து மொபைல் ஆப்பரேட்டர் நிறுவனங்களும் அறிமுகப்படுத்தி யிருப்பதால் மொபைல் பாவனையாளர்கள் மிக அதிக அளவில் அந்த 3ஜி சேவையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

அதேபோல் மொபைல் மூலமாக இணைய வானொலிகளையும் நாம் பயன்படுத்தி அதன்மூலம் உலகம் முழுக்க இருக்கின்ற தமிழ் உட்பட பல மொழிகளில் உள்ள வானொலிகளை 24மணி நேரமும் நாம் நமது மொபைலில் டிஜிட்டல் ஒலிதரத்தில் கேட்க முடியும்.

இதற்கு GPRS மற்றும் EDGE தொழில்நுட்ப வேகம் இருந்தால் போதும், நாம் இணையதள வானொலி சேவைகளை கேட்க முடியும்.என்றாலும் 3ஜி தொழில்நுட்பம் இருந்தால் தடையில்லா (buffering problem) வானொலி சேவைகளை கேட்க முடியும். அது இன்னும் சிறப்பாக இருக்கும்.

இந்த இணையதள வானொலி சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவே நமக்கு பல்வேறு நிறுவனங்கள் இலவச மொபைல் அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. அவற்றை நாம் நமது மொபைல் போன்களில் பதிந்து கொண்டால் ஒரு புதிய இசை உலகை நீங்கள் காணலாம்.

பின்குறிப்பு : பின்வரும் வானொலிகளின் பெயர்களின் மேலே "கிளிக்" செய்து அந்தந்த வானொலிகளின் இணையதளங்களில் சென்று சொல்லப்படும் வழிமுறைகளை பின்பற்றி அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

virtual radio  இந்த மென்பொருளில் 300 க்கும் மேற்பட்ட மொழி வாரியான வானொலிகளை கேட்கலாம்.குறிப்பாக தமிழ் வானொலிகள் அதிகம் இதில் இடம்பெற்றுள்ளன. ஒலி அமைப்பும் டிஜிட்டல் தரத்தில் உள்ளது கூடுதல் சிறப்பம்சம்.

+ spodtronic  இதுவும் ஒரு அசத்தலான மென்பொருள்,ஆனால் இதில் தமிழை விட மற்ற மொழி இணைய வானொலிகளை தான் நாம் அதிகமாக கேட்க முடியும்,வந்த புதிதில் இலவசமாக கொடுத்துக் கொண்டிருந்த மென்பொருளை இப்போது காசு கொடுத்தால் தான் தருகிறார்கள். பாடலை கேட்கும் போதே பாடல் இடம்பெற்ற ஆல்பம்,பாடியவர்கள் விபரம்,பாடலை நாம் மதிப்பீடு செய்யும் முறை என்று அசத்துகிறார்கள்.

+ tunin fm  இது முழுக்க முழுக்க அயல்நாட்டு மேற்கத்திய இசையை விரும்புபவர்களுக்கான தளம்,மிகக்குறைந்த வேகத்தில் ஒலியின் தன்மை அற்புதமாக உள்ளது.

mundu radio  இந்தியாவில் உள்ள Geodesic Limited என்ற நிறுவனம் தரும் மொபைலுக்கான இணைய வானொலி மென்பொருள் இது. இப்போது மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலும் நூற்றுக்கணக்கான வானொலிகளை கேட்க முடியும்.

lavella radio  நூற்றுக்கும் மேற்பட்ட வானொலிகளை கேட்க முடியும்.இலவச மென்பொருள் தான், இருந்தாலும் இதில் காசு கொடுத்து வாங்கப்படும் மற்றொரு மென்பொருளில் தான் முழுமையான டிஜிட்டல் தரம் கிடைக்கும்.

nokia internet radio  நோக்கியாவின் சார்பில் அதன் பாவனையாளர்களுக்கு தரப்படும் இணைய வானொலி இலவச மென்பொருள் இது. பெரும்பாலும் போன்களிலேயே பதிந்து வரும். இல்லாதவர்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.சூப்பர் மென்பொருள் இது.

1 comments:

மொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்ய சிறந்த தளங்கள்!

1
வசர யுகத்தில் நமது மொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்வது கூட ஒரு கடினமான வேலையாகி வருகிறது. திடீரென்று காலை ஏழு மணிக்கெல்லாம் பாஸ் அவசர வேலையாக அலுவலகத்துக்கு அழைக்கிறார்.

வேகமாக அங்கு கிளம்பிச் சென்ற பிறகுதான் தெரிகிறது நமது மொபைலில் பேலன்ஸ் இல்லை என்பது.ஒன்பது மணிக்குத்தான் தெருமுனையில் இருக்கும் கடைக்காரன் கடையை திறப்பான், ஆனால் அவசரமாக பேசியாக வேண்டும்,கையில் பணம்,கிரெடிட் கார்டு,டெபிட் கார்டு போன்ற இத்யாதிகள் இருந்தும் நம்மால் உடனடியாக ரீ-சார்ஜ் செய்ய முடிவதில்லை.

இதற்கு தீர்வாக அமைவதுதான் இணையதளம் மூலம் நமது மொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்து கொள்வது.இணைய உலகில் எதுவுமே சாத்தியமில்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு வசதிகள் வந்துவிட்டன.

அந்த வகையில் நமது மொபைலுக்கு ஆன்லைன் மூலமாக ரீ-சார்ஜ் செய்ய உதவும் மிகச்சிறந்த இணையதளங்களை இங்கே உங்களுக்காக பட்டியலிட்டுள்ளேன்.

rechargeitnow.com  ஹரியானா மாநிலம் குர்கானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது இந்த இணையதளம்.24 மணி நேரமும் உடனடியாக நமது மொபைலுக்கு டெபிட்,அல்லது கிரெடிட்கார்டை பயன்படுத்தி ஏர்டெல்,ஏர்செல்,வோடபோன்,பி,எஸ்,ஏன்,எல் உட்பட அனைத்து மொபைல் நிறுவன இணைப்புகளுக்கும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

மொபைல் மட்டுமல்லாமல் டாடாஸ்கை,டிஷ்டிவி,பிக்டிவி,வீடியோகான் உள்ளிட்ட டி.டி.ஹச் இணைப்புகளுக்கும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மிகவும்,பாதுகாப்பான விரைவான சேவைகளை வழங்குவதால் இந்த இணையதளத்தை அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள்.

பின்குறிப்பு : இங்கு உங்கள் நண்பர்களை அறிமுகப்படுத்தினால் இலவச ரீசார்ஜ் உட்பட பல பரிசு சலுகைகளும் உண்டாம்.

www.fastrecharge.com  சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 2007 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆன்லைன் ரீசார்ஜ் நிறுவனம் இது.ஏர்செல், ஏர்டெல்,வோடபோன்,ரிலையன்ஸ்,டாடாஇண்டிகாம்,பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட அனைத்து மொபைல் நிறுவன இணைப்புகளுக்கும்,வழக்கமான டி.டி.எச் இணைப்புகளுக்கும் நாம் இங்கே ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.இதன் முகப்புப் பக்கம் இன்னும் மேம்படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும்.

www.indianmobilerecharge.com  இதுவும் சென்னையை இடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் தான்.ஏர்செல்,ஏர்டெல்,வோடபோன் உள்ளிட்ட 11 மொபைல் நிறுவன இணைப்புகளுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். டி.டி.எச் சேவையில் தற்போதைக்கு டாடாஸ்கை,டிஷ்டிவி ஆகியவற்றுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்,கூடுதல் வசதியாக இதன் முகப்புப் பக்கத்தின் பேருந்து பயணத்துக்கு டிக்கெட் பதிவு செய்து கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் பக்க வடிவமைப்பும் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.

+   www.onestoprecharge.com  '100% திருப்தியான வாடிக்கையாளர்கள்' என்ற முத்திரையுடன் இயங்கி வரும் இந்த இணையதளம் கிட்டத்தட்ட எல்லா மொபைல் ஆப்ரேட்டர்களின் ரீசார்ஜ் சேவைகளையும்,எல்லா டி.டி.எச் நிறுவனங்களின் ரீசார்ஜ் சேவைகளையும் வழங்கி வருகிறது.

விரைவில் விமான டிக்கெட் பதிவு செய்வது,போஸ்ட்பெய்டு பில்களுக்கு பணம் செலுத்துவது, இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது போன்ற பிற வசதிகளையும் தர இருக்கிறார்கள்.

www.freecharge.in  'இந்தியாவின் நம்பர் ஒன் ப்ரீபெய்டு மொபைல் ரீசார்ஜ் இணையதளம்' என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வரும் இந்த இணைய தளத்தில் ரீசார்ஜ் இலவசம்.ஆமாம்,இந்த இணையத்தளத்தில் நீங்கள் பத்து ரூபாய் முதல் எவ்வளவு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்கிறீர்களோ அந்த பணத்தின் மதிப்புக்கு கொஞ்சம் அதிகமாகவே பிஸ்ஸாஹட்,குரோமா ரீடெயில், ஷாப்பர்ஸ்ஷாப் போன்ற வணிக நிறுவனங்களின் தள்ளுபடி கூப்பனை தந்து விடுகிறார்கள்.

கூப்பன்கள் உங்களுக்கு தேவையில்லை என்றால் நீங்கள் முழுமையான தொகைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.கூப்பன் வேண்டுமென்றால் அதற்கு டெலிவரி கட்டணமாக ஒரு கூப்பனுக்கு பத்து ரூபாய் வசூலிக்கிறார்கள். முழுக்க முழுக்க மொபைல் போன்களுக்கு மட்டுமே இங்கே ரீசார்ஜ் செய்ய முடியும்.மிகவும் பாதுகாப்பான,விரைவான ரீசார்ஜ் சேவையை வழங்கும் இணையதளங்களில் இதுவும் ஒன்றாகும்.

+   www.ezrecharge.in  குறைந்தது 25/- ரூபாய் முதல் இங்கே ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம்.எஸ்.எம்.எஸ் மூலம் ரீசார்ஜ் செய்வது,போன் மூலம் ரீசார்ஜ் செய்வது போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளும் இங்கு உண்டு.

www.justrechargeit.com  இதுவரை 63219 நபர்கள் பேஸ்புக் லைக் பட்டனில் சேர்ந்திருக்கிறார்கள்.கேஷ்கார்டு,டெபிட் கார்டு,கிரெடிட்கார்டு,முப்பதுக்கும் மேற்பட்ட வங்கிகளின் நேரடி வங்கி டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலமாகவும் இங்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.மிகவும் சிறப்பாக ரீசார்ஜ் செய்ய எளிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இணையதளம் இது.

http://www.anytimerecharge.com  freerecharge.in என்ற இணையதளத்தைப் போலவே இந்த இணையதளத்திலும் நாம் ரீ-சார்ஜ் செய்கின்ற பணத்தின் மதிப்புக்கு ஆன்லைனில் பொருட்களை வாங்க,தியேட்டரில் படம் பார்க்க,பேருந்து டிக்கெட் பதிவு செய்ய போன்ற அத்தியாவசியமான சேவைகளின் தள்ளுபடி கூப்பன்களை தருகிறார்கள்.

ஆனால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மொபைல் நிறுவனங்களின் ரீ-சார்ஜ் சேவைகள் தான் உள்ளன.ஏர்டெல், வீடியோகான், யூனிநார் போன்றவை இல்லை.

http://www.paytm.com  தொலைதொடர்பு நிறுவனங்களில் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கி வரும் one97 Communications நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்த இணையதளத்துக்கு சென்னை தி.நகரில் கூட அலுவலகம் உண்டு.

மொபைல்,டி.டி.எச் என இரண்டு சேவைகளுக்கும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். வாரத்தின் ஏழு நாட்களிலும் நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம், ரீ-சார்ஜ் செய்வதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்படும் என்று சத்தியம் செய்கிறார்கள்.

பின்குறிப்பு : என்னதான் சத்தியம் செய்யாத குறையாக சிறப்பான சேவைகளை நாங்கள் வழங்குகிறோம் என்று இவர்கள் சொன்னாலும் பொதுவாகவே இணையதளம் மூலமான பணப்பரிவர்த்தனைகளில் நாம் எப்போதுமே உஷாராக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வோம் நண்பர்களே...

1 comments:

அதென்ன ? S.M.S 2.0

0
மொபைல் வைத்திருப்பவர்கள் அடுத்தவர்களிடம் போனில் பேசுவதை விட குறுஞ்செய்தி என்று சொல்லப்படுகிற எஸ்.எம்.எஸ் அனுப்புவது தான் மிக அதிகமாக உள்ளது.காரணம் அந்தளவுக்கு எஸ்.எம்.எஸ்  அனுப்புவது மொபைல் உபயோகிப்பாளர்களிடம் பிரபலமாக உள்ளது.
நாம் பிசியான நேரங்களில் இருப்பதை நம்மை தொடர்பு கொள்பவருக்கு நாசுக்காக தெரிவிக்க இந்த குறுஞ் செய்தி சேவை உதவி செய்கிறது.

சில பேர்களிடம் நேரில் தெரிவிக்க முடியாத பல விஷயங்களை மொபைல் மூலம் தெரிவிக்க இந்த எஸ்.எம்.எஸ் சேவை உதவுகிறது. குறிப்பாக காதலிப்பவர்கள் மொபைலில் பேசுவதை விட எஸ்.எம்.எஸ் மூலமாக பேசிக்கொள்வதுதான் மிகமிக அதிகம்.இதற்கு காரணம் வேறு சொல்ல வேண்டுமா என்ன?

இப்படி மனித வாழ்க்கையில் கூடவே வரும், மௌனமாய் சாகசம் செய்யும் ஒருமனிதனைப் போல நம்மை பின் தொடர்வதுதான் மொபைல் எஸ்.எம்.எஸ் சேவை.அப்படிப்பட்ட எஸ்.எம்.எஸ் அனுபவத்தை நாம் இன்னும் புதுமையாக மேற்கொள்ள உதவுவது தான் Affle Limited நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும்  S.M.S 2.0

அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.

குறைந்தபட்சம் ஜி.பி.ஆர்.எஸ் வசதி கொண்ட கலர் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு கூட இந்த அப்ளிகேஷன் ஒரு புதுமையான எஸ்.எம்.எஸ் அனுப்பும் அனுபவத்தை தரும் என்றால் அது மிகையாகாது. காரணம் பொதுவாக நாம் ஒருவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும்போது மிகவும் சாதாரணமாக லெட்டர்களை மட்டுமே டைப் செய்து அனுப்புவோம்.ஆனால் இந்த அப்ளிகேஷனை நாம் நமது மொபைலில் பயன்படுத்துவதன் மூலம் கீழ்க்கண்ட வசதிகளை பெறலாம்.

1. லெட்டர்களை (TEXT) கலரில் டைப் செய்து அனுப்பலாம்.

2. உங்கள் குறுஞ்செய்தியை பெறுபவரின் மூடுக்கேற்ற மாதிரியான, அல்லது நீங்கள் அனுப்பும் செய்தியின் தன்மைக்கேற்ற 'Smileys' களை இணைத்து அனுப்பலாம்.

3. ஒவ்வொரு முறையும் குறுஞ்செய்தி அனுப்பும்போது அதன் பின்பக்கத்தின் வண்ணத்தை (BACKGROUND COLOUR) மாற்றி அனுப்பலாம்.

4. நீங்கள் நினைக்கும் நேரத்தில் தானாக எஸ்.எம்.எஸ் செல்லும்படி செட் செய்து அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.அதேபோல உங்கள் குறுஞ்செய்தியை இமெயிலாக மாற்றி அனுப்பலாம்.

5. இதில் இருக்கும் ஸர்ச் (SEARCH) வசதி மூலம் நாம் இணைய தேடல்,நீங்கள் வைத்திருக்கும் ஆபரேட்டர் தரும் வசதிகளை தேடும் வசதி,நகரத்தை தேடும் வசதி,வேலை தேடுதல்,வீட்டுமனை தேடுதல் போன்ற சேவைகளை மேற் கொள்ள முடியும்.

பின்குறிப்பு : இந்த அப்ளிகேஷன் முழுக்க முழுக்க இலவசம் தான். ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் லைவ் போர்ட்டலுக்கு சென்று அங்கேயும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.நோக்கியா, சோனிஎரிக்சன்,சாம்சங் கம்பெனிகளின் பெரும்பாலான மாடல்களை இந்த அப்ளிகேஷன் ஆதரிக்கிறது.எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் எஸ்.எம்.எஸ் பக்கத்திரையில் சினிமா, விளையாட்டு,அரசியல்,கல்வி,பேஷன்,வணிகம் சம்பந்தமான அன்றாட நிகழ்வுகளை செய்திகளாக படித்து மகிழலாம்.

0 comments:

ஆன்ட்ராய்டு போனில் அப்ளிகேஷனை பதிவது எப்படி?

0




ன்னதான் காய்கறிகளை மொத்தமா விக்குறதுக்குன்னே மார்க்கெட் தனியா இருந்தாலும் வீட்டுக்கு பக்கத்துல தள்ளுவண்டியில கொண்டு வர்றவர்கிட்ட நாம பேரம் பேசி காய்கறி வாங்குறதே சுகமே தனி தான்.

அதேமாதிரி தான் ஆன்ட்ராய்டு போனும்.

என்னதான் கூகுள் நிறுவனமே ஒரு லட்சத்துக்கும் மேல அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்யிறதுக்காக மொபைல்ல தனியா மார்க்கெட்(android market)  வச்சிருந்தாலும் நாம நம்ம மொபைல்ல சில மூன்றாம் தர (third party)  வர்க்கத்தோட அப்ளிகேஷன்களை பயன்படுத்த விரும்புவோம்.மொபைல்ல தேடுறத விட கணினியில அப்ளிகேஷன்களை தேடுறது இன்னும் சுலபம். அதுமட்டுமில்லாம மொபைல்ல தரவிறக்கம் செய்யிறதை விட கணினியில தரவிறக்கம் செய்யுறதுனாலது நேரமும் மிச்சமாகும்.

இப்போ கணினி மூலமா ஒரு அப்ளிகேஷனை தரவிறக்கம் செஞ்ச பின்னாடி அதை எப்படி ஆன்ட்ராய்டு போன்ல பதியிறதுன்னு உங்கள்ல நிறைய பேருக்கு குழப்பமா இருக்கலாம். ஆனா ரொம்ப எளிமைதான். நோக்கியா போன்களில் அது தரும் கணினி சூட் (NOKIA PC SUITE) மூலமா அப்ளிகேஷன்களை நேரடியா மொபைல்ல பதிவு செய்ய முடியும். ஆனால் ஆன்ட்ராய்டு போன்களில் அப்படி பண்ண முடியாது.

அதுக்குப்பதிலா இன்னொரு வழிமுறை இருக்கு.அந்த வழிமுறையை இங்க பாக்கலாம்.

நாம கணினி மூலமா தரவிறக்கம் செய்யிற பெரும்பாலான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் ஜிப் (ZIP) ஃபைலாகத்தான் வரும்.அதனால முதல்ல தரவிறக்கம் செய்த அப்கேஷனை (extract here) பிரித்தெடுத்து கணினியில் சேமித்துக் கொள்ளவும்.

உதாரணமா நீங்க தரவிறக்கம் செய்த அப்ளிகேஷன் barcode scanner என்ற அப்ளிகேஷனாக இருந்தால் அதை பிரித்தெடுத்த பின்பு barcode scanner. 3.2.apk என்று இருக்கும். இதில் 3.2 என்பது அந்த அப்ளிகேஷனின்  (version) வெர்ஷனை குறிக்கும். நீங்கள் தரவிறக்கம் செய்த எல்லா ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்களும் apk என்றுதான் முடியும்.

இப்போது நீங்கள் போனில் உள்ள மெமரிகார்டை தனியா கழற்றி உங்க கணினியில் இணைத்து அந்த மெமரிகார்டில் நீங்கள் தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் அப்ளிகேஷன்கள் எல்லாவற்றையும் சேமித்துக் கொள்ளவும்.

பிறகு மெமரிகார்டை கணிணியில இருந்து வெளியில் எடுத்து அதை உங்க போனில் சொருகி போனை ஆன் செய்து உங்கள் போனில் மெமரி கார்டில் உள்ளவற்றை காட்டும் அப்ளிகேஷனை  (சாம்சங் போனில் my files என்றிருக்கும்.) திறந்து பார்த்தால் அங்கே நீங்கள் கணினியிலிருந்து மெமரி கார்டுக்கு மாற்றிய அப்ளிகேஷன்கள் எல்லாமும் இருக்கும்.அதை ஒவ்வொன்றாக அழுத்தி உங்கள் போனில் பதியுங்கள்.

அப்படி எல்லாவற்றையும் பதிந்த பிறகு இப்போது உங்கள் போனில் உள்ள மெனுவைப் பாருங்கள் நீங்கள் பதிந்த அப்ளிகேஷன்கள் எல்லாமும் திரையில் காட்சியளிக்கும்.இப்போது அவைகளை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த விளக்கம் உங்களுக்கு புரியாத பட்சத்தில் எனக்கு போன் செய்யுங்கள் உங்களுக்கு தேவையான விளக்கங்களை அளிக்கிறேன்.

பின்குறிப்பு : இந்த வழியில் அடிக்கடி மெமரிகார்டை வெளியில் எடுக்க சிரமமாயிருந்தால் உங்கள் போனை mass storage மோடில் கணினியில் இணைத்து காட்டப்படும் மெமரி கார்டின் அளவில் உங்கள் அப்ளிகேஷன்களை சேமித்துக்கொண்டு அதன் பிறகு போனை தனியாக எடுத்து அப்ளிகேஷன்களை போனில் பதியலாம். 

0 comments:

மொபைலில் தமிழ்தளங்களை வாசிக்க எளிய வழி!

5
ஐ-போனில் தமிழ் வாசிக்கலாம்
மொபைல் சந்தையில் புதிய புதிய தொழில் நுட்பங்கள் வந்து கொண்டிருந்தாலும் அவை ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது.இப்போதும் கூட நம்மால் மொபைலில் தமிழ் இணைய தளங்களை வாசிக்க முடிவதில்லை.மொபைலில் முன்னிருப்பாக (default) கொடுக்கப்பட்டிருக்கும் ப்ரௌசர்களில் தான் இது பெரும் பிரச்சனையாக உள்ளது.

அதற்கு தீர்வாக அமைவது தான் opera mini browser

இந்த அப்ளிகேஷனில் ஒரே ஒரு மாறுதலை செய்வதன் மூலம் நாம் நமது மொபைலில் தமிழ் இணையதளங்களை அழகான தமிழில் வாசிக்க முடியும்.

முதலில் உங்கள் மொபைல் ப்ரௌசரில் http://www. opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.

operamini - ஐ தரவிறக்க செய்ய இங்கே அழுத்தவும் இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த பிறகு...

1. opera mini browser - ஐ ஓபன் செய்யவும்

2. அட்ரஸ் பாரில் opera:config என்று மட்டும் டைப் செய்து ஒகே கொடுக்கவும். (http://www என்று டிஃபால்ட்டாக தெரியும் எழுத்துக்களை நீக்கி விட வேண்டும்)

இந்த மாறுதலை செய்தாலே போதும்
3. வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" power-user setting பக்கத்தில் use bitmap fonts for complex scripts என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். (படத்தை பார்க்கவும்!)

4. பிறகு opera mini - ஐ யை restart செய்யவும். இனி எல்லா தமிழ் இணையதளங்களையும் நீங்கள் உங்கள் மொபைலில் வாசிக்கலாம்.

இப்போதைக்கு மொபைலில் இப்படித்தான் நாம் தமிழ் இணையதளங்களை வாசிக்க முடியும்.மேலும் operamini பிரௌசர் பெரும்பாலான மொபைல்களுக்கு சப்போர்ட் செய்வதால் இது சாத்தியமாகிறது

பின்குறிப்பு : ஆப்பிள் ஐ-போனில் முன்னிருப்பாக (default) உள்ள ப்ரௌசரில் தமிழ்தளங்களை அழகாக வாசிக்க முடியும்,மேலும் தமிழில் எஸ்.எம்.எஸ் கூட அனுப்ப முடியும்.அதற்கு அப்-ஸ்டோரில் உள்ள இலவச தமிழ் எஸ்.எம்.எஸ் அப்ளிகேஷனை நீங்கள் தரவிறக்கம் செய்தால் போதும்.

கூகுளின் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் விரைவில் தமிழ்மொழி சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் வேலைகள் நடைபெற்று வருகிறது. வெகுவிரைவில் அதன் அப்டேட் வெர்ஷன்களில் இந்த வசதியை நாம் பெறலாம்.அதனால் இப்போது மொபைல் பாவனையாளர்களிடையே பிரபலமாகியிருக்கும் ஆன்ட்ராய்டு ஆபரேட்டிங்கில் தமிழ் வருவதன் மூலம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நல்ல நிலை உருவாகலாம்.

5 comments:

இன்னும் வராத மொபைல் நுட்பங்கள்?

0
கவல் தொடர்பு துறையில் இந்தியா நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருப்பதாக அடிக்கடி நாம் செய்திதாள்களில் படிக்க நேர்கிறது.

*  "மே மாதத்தில் 30 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்தார்கள்,மொத்த    இணைப்பு 20 கோடியை தாண்டிவிட்டது".

* "உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் உள்ளது".என்றெல்லாம் இந்திய அரசு பீத்திக்கொண்டாலும் உண்மையில் மிக மோசமான மதிப்பு கூட்டப்படாத சேவைகளுடன் தான் இந்தியாவில் உள்ள செல்போன் நிறுவனங்கள் தங்களது மொபைல் சேவையை வழங்கி வருகின்றன.

பல நாடுகளில் எப்போதோ வந்துவிட்ட 3G சேவை இப்போதுதான் இந்தியாவில் வந்திருக்கிறது.ஆரம்பத்தில் இந்த தொழில்நுட்பத்தை முதலில் சில குறிப்பிட்ட மாநகரங்களில் அறிமுகப்படுத்திய பி.எஸ்.என்.எல் நிறுவனமும் வழக்கம் போல குறைட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.

பொதுவாக மொபைல் நிறுவனங்கள் தரும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளில் GPRS,MMS,WAP PORTAL,VOICE SERVICE, CAALER TUNES, RINGTONES, WALLPAPERS,GAMES DOWNLOADS போன்ற சேவைகள் தரப்பட்டாலும் எப்போதோ நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்திய இரண்டு சேவைகள் இன்னும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை.காரணம் இந்த சேவைகளை மொபைல் ஆபரேட்டர்கள் மூலமாகத்தான் பயன்படுத்த முடியும் .

VISUAL RADIO (விஷுவல் ரேடியோ) : இந்த தொழில்நுட்பம் முழுக்க முழுக்க நோக்கியா நிறுவனத்தை சார்ந்ததாகும்,பொதுவாக நாம் மொபைலில் ரேடியோ கேட்கும் போது அந்த ரேடியோ ஸ்டேஷன் பெயர் மற்றும் அலைவரிசை எண்ணை மட்டுமே போனின் திரையில் நம்மால் பார்க்க முடியும். ஆனால் நோக்கியா கண்டுபிடித்த இந்த தொழில்நுட்பம் மூலம் அந்த பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர்? பாடலை பாடியது யார்? உட்பட பல விபரங்களையும், வானிலை நிலவரங்களையும் சாலைகளில் ட்ராபிக் நிலவரங்களையும் என எல்லாவற்றையும் நமது மொபைல் திரையில் நேரடியாக காண முடியும். மேலும் அந்தப் பாடலுக்கு நாம் மதிப்பு கொடுப்பது அந்தப் பாடலை தரவிறக்கம் செய்து கொள்வது போன்ற வேலைகளையும் செய்து கொள்ள முடியும்.

இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த நோக்கியா நிறுவனம் முதல் முறையாக அதை தாங்கள் தயாரிக்கும் மொபைல்களில் புகுத்தி அதன் சொந்த நாடான பின்லாந்து நாட்டில் சோதனை செய்து பார்த்தது,அது வெற்றி பெறவே உலகத்திலுள்ள பல நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தை நோக்கியா நிறுவனம் தங்களது மொபைல் சாதனங்கள் மூலம் அறிமுகப்படுத்தியது.

 இந்த தொழில்நுட்பம் நோக்கியா போன்களில் மட்டுமே இருக்கும்,இந்த வகை போன்கள் 5000/- என்ற விலையிலிருந்து சந்தையில் கிடைக்கிறது. குறிப்பாக நோக்கியாவின் 'N-SERIES' போன் வகைகளில் இந்த தொழில்நுட்பம் உத்திரவாதத்துடன் உள்ளது.

PUSH TO TALK (புஷ் டூ டாக்) : இந்த தொழில்நுட்பம் மற்ற கம்பெனியின் மொபைல்களிலும்  இருந்தாலும் நோக்கியா நிறுவனம் தான் இந்த தொழில்நுட்பம் உள்ள போன்களை அதிகமாக வெளியிடுகிறது. இந்த "புஷ் டூ டாக்" தொழில்நுட்பம் ஒரு வாக்கி-டாக்கி சமாச்சாரத்தை ஒத்ததுதான். இந்த வகை போன்களில் இதற்காகவே தனியாக ஒரு பட்டன் இருக்கும்.அதனை அழுத்தி நாம் ஐந்துக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் ஒரே நேரத்தில் தொடர்பை ஏற்படுத்தி பேச முடியும்,அதாவது பொதுவாக கான்பரன்ஸ் கால் என்று சொல்லப்படும் வசதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் பேச வேண்டு மென்றால் நாம் ஒவ்வொருவரின் நம்பரையும் டயல் செய்ய வேண்டியிருக்கும்.ஆனால் இந்த நுட்பத்தில் அந்த நம்பர்களை ஒன்றன் பின் ஒன்றாக சேமித்து வைத்து விட்டால் ஒரு பட்டனை அழுத்தி ஒரே நேரத்தில் அத்தனை பேரிடமும் பேசமுடியும்.

இந்த தொழில்நுட்பத்தை நமது மொபைல் ஆபரேட்டர்கள் உதவியால் தான் பயன்படுத்த முடியும்.புதிய புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உலக நாடுகள் வரிசையில் இந்தியா மட்டுமே இன்னும் முயலோடு போட்டியில் கலந்து கொண்ட ஆமையாக இருக்கிறது. இப்படி இருந்தால் எப்படி இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னேறும்?

பின்குறிப்பு : இந்த இரண்டு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய  மொபைல்களை நோக்கியா நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்பே சந்தையில் அறிமுகப்படுத்தி விட்டது.ஆனால் இங்குள்ள மொபைல் ஆபரேட்டர் நிறுவனங்கள் இந்த சேவைகளை முழுமையாக தர அக்கறை காட்டவில்லை.அதனால் நோக்கியா நிறுவனம் புதிதாக தயாரித்து வெளியிடும் பெரும்பாலான மொபைல்களில் இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் பதிந்து வெளியிடுவதை குறைத்துக் கொண்டுள்ளது.

0 comments:

மொபைலுக்கான இலவச தரவிறக்க தளங்கள்!

2
மது மொபைலுக்கு தேவையான வால்பேப்பர்கள், கேம்ஸ்,வீடியோக்கள், அப்ளிகேஷன்கள் ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று அனைத்தையும் நாம் பைசா செலவில்லாமல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில் பல தளங்கள் உள்ளன. அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) போதும். நாம் எப்போது வேண்டு மானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.கீழே மொபைலுக்கான சில இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

www.zedge.com  வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று உங்கள் போனுக்கு தேவையான எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.அதற்கு நீங்கள் இதில் மெம்பராகி மொபைல் மாடலையும் தேர்வு செய்துவிட்டு வேலையை ஆரம்பிக்கலாம். அதிகபட்ச நிறுவனங்களின் பலதரப்பட்ட மாடல் மொபைல்களுக்கு இங்கே எல்லாமும் கிடைக்கிறது.அது மட்டுமல்லாமல் நேரடியாக உங்கள் மொபைலிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.அதற்கு உங்கள் மொபைலின் பிரவுசரில் http://m.zedge.net  என்று டைப் செய்து இணையலாம்.

www.gallery.mobile9.com  நமது மொபைலுக்கு தேவையான வால்பேப்பர்கள், கேம்ஸ், வீடியோக்கள், ரிங்டோன்கள்,தீம்ஸ்,அப்ளிகேஷன்கள் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் மெம்பராகவில்லை என்றால் ஒவ்வொரு தரவிறக்கத்துக்கும் குறைந்தது 10 நொடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும்,அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.பின்பு தரவிறக்கம் செய்ய ஆரம்பியுங்கள்.மேலும் இந்த தளத்தில் உங்களிடம் இருப்பவற்றையும் தரவேற்றம் செய்து மற்றவர்களின் பார்வைக்கும் வைக்கலாம்.

www.getjar.com  முழுக்க முழுக்க ஜாவா,மற்றும் சிம்பியன் வகையை சார்ந்த போன்களுக்கான கேம்ஸ்,அப்ளிகேஷன்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் தளம் இது. பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மென்பொருட்கள்  உள்ளன. மெம்பராகாமல் நேரடியாக தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம்.மொபைலில் நேரடியாக தரவிறக்கம் செய்ய உங்கள் மொபைலின் பிரவுசரில் http://m.getjar.net என்று டைப் செய்து இணையலாம்.

http://www.apniapps.com  ஐ-போன்,சிம்பியன்,ஜாவா வகையை சேர்ந்த போன்களுக்கான அப்ளிகேஷன்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தரவிறக்கம் செய்து கொள்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அப்ளிகேஷனைப் பற்றிய சிறுகுறிப்பும் உள்ளது, அதை படித்து பார்த்து உங்கள் போனுக்கு தேவையானால் அதை  தேர்ந்தேடுக்கலாம்.

http://www.mobilemastee.com  வால்பேப்பர்கள், கேம்ஸ், வீடியோக்கள், ரிங்டோன்கள், தீம்ஸ்,அப்ளிகேஷன்கள்,ஸ்க்ரீன்சேவர்ஸ் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மெம்பராக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

http://dailymobile.se  ஐ-போன்,சிம்பியன்,ஜாவா,ஆன்ட்ராய்டு வகையை சேர்ந்த மொபைல்களுக்கு வால்பேப்பர்கள், கேம்ஸ்,தீம்ஸ்,மென்பொருட்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.முக்கியமாக இதில் முதலில் மெம்பரான பிறகுதான் தரவிறக்கம் செய்ய முடியும்.அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.கூடுதலாக மொபைல் உலகில் வந்திருக்கும் புதிய சம்மாச்சரங்கள் அனைத்தையும் இந்ததளம் உடனுக்குடன் நமக்கு தருகிறது.

http://www.ipmart-forum.com  இந்த தளத்தில் 'Fun,Games and Entertaining' என்ற பிரிவில் சென்று நீங்கள் வைத்திருக்கும் எந்தவகை மாடலுக்கும் தேவையான தரவிறக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.தரவிறக்கத்தை ஆரம்பிக்க முதலில் இதில் மெம்பராக வேண்டும்.புதிய அப்ளிகேஷன்களையும்,அப்டேட் செய்யப்பட்ட பழைய அப்ளிகேஷன்களையும் உடனுக்குடன் தருகிறார்கள். விலை கொடுத்து வாங்க வேண்டிய அப்ளிகேஷன்கள் கூட இங்கே இலவசம் தான்.

http://www.youpark.com  ஜாவா,சிம்பியன்,விண்டோஸ்,பாம்,பிளாக்பெர்ரி
ஆன்ட்ராய்டு வகை போன்களுக்கு தேவையான அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்துகொள்ள இந்ததளம் உதவுகிறது.இலவச,மற்றும் காசு கொடுத்து வாங்கக்கூடிய மென்பொருட்களை பட்டியலிட்டுள்ளார்கள்.காசு கொடுத்து வாங்கினால் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறார்கள்.மெம்பராக வேண்டும் என்று கட்டாயமில்லை.ஏதாவது இலவச மென்பொருளை தரவிக்கம் செய்ய நினைத்தால் உங்கள் இ-மெயில் முகவரியை கொடுத்துவிட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.உங்கள் மொபைல் வழியாக http://wab.youpark.com என்ற முகவரியில் நேரடியாக இணையலாம்.

2 comments: